மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2024-25 ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர் கல்வி சேர்க்கை மற்றும் தோல்வியுற்ற மாணவர்களை சிறப்பு துணை தேர்வு எழுத வைத்து தேர்ச்சி பெறவைப்பதற்காக சிறப்பு கூட்டம் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நாளை காலை 10:00 மணிக்கு, நடக்கிறது. மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement