கும்மிடிப்பூண்டியில் கலெக்டர் சோதனை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்ட பணிகளை, நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, புதுப்பாளையம் நெடுஞ்சாலை பாலம், மங்களம் தரைப்பாலம், எருக்குவாய் நபார்டு சாலை, சிறுபுழல்பேட்டை நடுநிலைப்பள்ளி புதிய வகுப்பறை கட்டடம், கீழ்முதலம்பேடு கிராமத்தில் நுாலக கட்டடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
மேலும், ஊராட்சி அலுவலக கட்டடம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடு, தேர்வாய்கண்டிகை கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு கட்டப்பட்டு வரும், 61 வீடுகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement