பத்திர காளியம்மன் கோயில் திருவிழா

நத்தம்: நத்தம் காமராஜ் நகர் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா ஜூன் 10ல் அழகர்மலை தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. பால்குடம், அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன்களை செலுத்தினர். கரகம் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. அம்மனை தரிசனம் செய்தனர்.

Advertisement