மண்டல அபிேஷகம் நிறைவு விழா

புதுச்சேரி: திருக்கனுார் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் கடந்த ஏப்ரல் மாதம் 30 ம் தேதி நடந்தது. அன்று முதல் மண்டல அபிேஷக விழா துவங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்து வந்தது. 48 வது நாளான நேற்று மண்டல அபிேஷகம் பூர்த்தி விழா நடந்தது.

இதையொட்டி காலை 6.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலசபூஜை, திரவியாவதி ஹோமம், மகா பூர்ணாஹூதி நடந்தது. காலை 8.30 மணிக்கு கலசாபிேஷகம், மகா தீபாரதனை நடந்தது. மாலை 6.00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement