'கர்நாடக முதல்வரிடம் தமிழக முதல்வர் பாடம் கற்க வேண்டும்'
திருவண்ணாமலை, ''கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், சமூக நீதி என்னவென்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் பாடம் கற்று கொள்ளட்டும்,'' என, பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி பேசினார்.
திருவண்ணாமலையில் நேற்று நடந்த, பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:
கடந்த, 1989ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மீண்டும், இட ஒதுக்கீடு கேட்டு மிகப்பெரிய போராட்டம் தொடங்க உள்ளதாக கூறியவுடன், கருணாநிதி பயந்து, எம்.பி.சி., என உருவாக்கி, அத்துடன், 108 ஜாதிகளை இணைத்து விட்டார். அதனால் தான், உள் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறோம். இ.பி.எஸ்., 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை தேர்தல் நேரத்தில் கொடுத்தார். இதுவே, ஒன்றரை மாதத்திற்கு முன் கொடுத்திருந்தால், பிரச்னை இருந்திருக்காது.
கர்நாடகாவில், 2015ல் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியது போதாது, மீண்டும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த போகிறோம் என, அம்மாநில முதல்வர் சித்தராமையா நேற்று கூறியுள்ளார். மத்திய அரசு எடுக்கும் ஜாதி வாரி கணக்கெடுப்பு போதுமானதல்ல. நான் கர்நாடகாவில், பின்தங்கிய சமுதாயம், அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கள் கொடுக்கணும், இட ஒதுக்கீடு கொடுக்கணும்.
நல்ல திட்டங்களை கொடுக்கணும்னா, கர்நாடகாவில் ஜாதிவாரி சர்வே எடுத்தால்தான், என்னால் கொடுக்க முடியும் என அவர் கூறுகிறார். கூட்டணி கட்சி தானே அது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், முதல்வர் ஸ்டாலின் சமூக நீதி என்னவென்று பாடம் கற்று கொள்ள வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, பீஹார் முதல்வர்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருக்கு. ஆனால், தமிழக முதல்வருக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லையாம்.
வரலாற்றில், அமைச்சர் வேலுவிற்கு ஒரு இடம் உண்டு. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வைத்தவர் என, இவரது பெயர் முதலில் இடம் பெற்றுள்ளது. இம்மாவட்ட விவசாயிகள் உண்மையான விவசாயிகளாக இருந்தால், வரும் தேர்தலில் ஒருவர் கூட, தி.மு.க.,விற்கு ஓட்டு போடக்கூடாது. தி.மு.க.,வினர், வன்னியர்களையும், பட்டியலினத்தவரையும் சேர விடாமல் மோத விட்டு வருகின்றனர். இதை அனைவரும் உணர்ந்து கொண்டு விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
பாணாம்பட்டு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
-
அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
-
விசைத்தறி காடா துணிகள் மதிப்புக்கூட்டு பொருளாகும்
-
'நீட்'தேர்வில் மாநில அளவில் சாதனை ஆதித்யா மாணவர்கள் முதல்வரிடம் வாழ்த்து
-
வாரிசுதாரர்கள் பணி நியமன முறைகேடு அதிகாரிகள் மீது போலீசில் புகார்
-
'குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26,000 தொழிலாளருக்கு வழங்க வேண்டும்'