பாணாம்பட்டு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

விழுப்புரம்: ழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, பாணாம்பட்டு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடில், பாணாம்பட்டு சாலை சந்திப்பிலிருந்து செல்லும் மெயின்ரோடு மிகவும் குறுகிய அளவில் உள்ளதால், அங்கு தினசரி போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. பாணாம்பட்டு மெயின்ரோட்டில் 500 மீட்டர் துாரத்திற்கு சாலை ஆக்கிரமிப்பு உள்ளதால், காலை, மாலை பள்ளி, கல்லுாரி விடும் நேரங்களில் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது.

இந்த நெரிசலை தவிர்ப்பதற்காக, நகராட்சி சார்பில், தற்காலிக நடவடிக்கையாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. நேற்று காலை பாணாம்பட்டு சாலையில், எம்.ஜி.ஆர்., சிலை முகப்பிலிருந்து, 100 மீட்டர் தொலைவிற்கு இருந்த ஆக்கிரமிப்பு கொட்டகைகள், பேனர்கள் இடித்து அகற்றப்பட்டது.

ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சாலையை அகலப்படுத்தும் பணியை நகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸ் மேற்கொண்டனர். தொடர்ந்து அங்கு சாலை விரிவாக்கம் செய்து, சாலை புதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement