கும்மிடி பேரூராட்சி சமுதாய கூடம் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுமா?

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சமுதாய கூடத்தில் சமையல் அறை, டைனிங் ஹால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் அருகே சமுதாய கூடம் உள்ளது. மணமேடை, கழிப்பறையுடன் மணமகன் மற்றும் மணமகள் அறைகள், பார்வையாளர் அரங்கு, வெளிப்புறத்தில் தனியாக கழிப்பறைகள் உள்ளன.
சமையல் அறை, டைனிங் ஹால் வசதி இல்லாததால், திருமண விழாக்கள் இங்கு நடைபெறுவது இல்லை. சில மணி நேரம் நடக்கும் கட்சி, சங்க கூட்டங்கள், பிறந்தநாள் விழாக்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
சமுதாய கூடம் முறையான பராமரிப்பின்றி இருப்பதால், எந்த நிகழ்ச்சியும் நடைபெறுவதில்லை. எனவே, தனியாக சமையல் அறை, முதல் தளத்தில் டைனிங் ஹால் வசதி ஏற்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி முறையாக பராமரித்தால், திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகள் நடைபெறும். அதன் வாயிலாக எளிய மக்களும் நிகழ்ச்சிகள் நடத்துவதுடன், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
பாலைவனமாதல் தடுப்பு தினம் பள்ளியில் விழிப்புணர்வு
-
அறிவிப்பின்றி மின் வெட்டு; மலைப்பகுதி மக்கள் அவதி
-
ராஜினாமா முடிவில் பா.ம.க., எம்.எல்.ஏ.,; தந்தை - மகன் மோதலில் அடுத்த திருப்பம்
-
உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு; அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
படிக்கட்டுகளில் வழுக்கல் பிளீச்சிங் பவுடர் துாவணும்!
-
படகு இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு; மழைக்கு பின் துார்வாரப்படும்