அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தேனி: மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைய கோரி தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட துணைத்தலைவர் ரவிக்குமார் தலைமை வித்தார். மாவட்ட செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். சங்க மாநில செயலாளர் நீதிராஜா, மாவட்ட பொருளாளர் நாகராஜன், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் துரைராஜ், வருவாய்த்துறை இணை செயலாளர் கருப்பனராஜா பங்கேற்றனர். முன்னதாக முதல்வர், நிதித்துறை செயலாளருக்கு டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, மாவட்ட கருவூல அலுவலர் அருணாச்சலம் மூலம் முறையீட்டு கடிதம் அனுப்பினர்.

Advertisement