துருவையில் புதிய அங்கன்வாடி மையக்கட்டடம் திறப்பு விழா

வானுார்,: துருவை கிராமத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை ஒன்றிய சேர்மன் திறந்து வைத்தார்.

வானுார் அடுத்த துருவை கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதே போன்று ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ. 7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் அறை கட்டடம் மற்றும் புதிய கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் அன்பழகி மணிபாலன் வரவேற்றார். சிறப்பு விருந்திரனாக ஒன்றிய சேர்மன் உஷா முரளி பங்கேற்று அங்கன்வாடி மையம், சமையல் அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் வானுார் பி.டி.ஓ., சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய பொறியாளர் குகன், ஓவர்சீயர் ஞானவேல், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முரளி, மாவட்ட பிரதிநிதி பாலு, முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துவேல், கிளை செயலாளர் ஜெயமூர்த்தி, அ.தி.மு.க., மாவட்ட வர்த்தக அணி தலைவர் செல்லப்பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணைத்தலைவர் லதா சேகர் நன்றி கூறினார்.

Advertisement