புதிய பான் கார்டு விண்ணப்பிக்க ஜூலை முதல் ஆதார் கட்டாயம்

புதுடில்லி:புதிதாக பான் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு, ஜூலை 1ம் தேதி முதல், ஆதார் எண் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட உள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நடைமுறையில் விண்ணப்பதாரரின் பெயர், பிறப்பு சான்றிதழ் அல்லது வேறு பிற அடையாள சான்றிதழ் இருந்தாலே, பான் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும்.
அடுத்த மாதம் முதல், வருமான வரித்துறை இணையதளத்தில், பான் கார்டு விண்ணப்பங்களில் ஆதார் எண் சரிபார்ப்பும் சேர்க்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நபருக்கு பல பான் கார்டுகளும், வேறொருவரது பெயரில் உள்ள பான் கார்டை தவறாக பயன்படுத்துவதன் வாயிலாகவும், வரி ஏய்ப்பு நடைபெறுவதை வருமான வரித்துறை கண்டறிந்தது. எனவே, பான் - ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியது.
ஏற்கனவே, பான் கார்டு வைத்துள்ளவர்கள், நடப்பாண்டு இறுதிக்குள் அதை ஆதார் எண்ணுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இணைக்காதபட்சத்தில், அடுத்தாண்டு முதல் பான் கார்டு செயலிழந்து விடும்.
கடந்த 2024 மார்ச் நிலவரப்படி, மக்களிடம் 74 கோடி பான் கார்டுகள்
60.50 கோடி பேரின் ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைப்பு