மதுக்கடைகளை அகற்ற நாம் தமிழர் கட்சி மனு
வால்பாறை : வால்பாறை நகரில், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக உள்ள மதுபானக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, நாம்தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மேத்யூ, மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி ஆகியோர், வால்பாறை தாசில்தாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு முன்பாக உள்ள அரசு மதுபானக்கடையால் பக்தர்கள் நிம்மதியாக கோவிலுக்கு செல்ல முடியவில்லை. இதே போல், வால்பாறை மார்க்கெட் பகுதியில் அம்மா உணவகத்தின் பின்பக்கம் நகராட்சி கட்டடத்தில் இயங்கும் மதுபானக்கடையால் பொதுமக்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.
வால்பாறை நகரில் செயல்படும் இந்த இரண்டு மதுபானக்கடைகளால் மக்கள் நிம்மதியாக ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை. எனவே, வால்பாறை நகரில் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள அரசு மதுபானக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; டிரக் மீது பொலிரோ மோதிய விபத்தில் 9 பேர் பலி
-
டாஸ்மாக் முறைகேடு; தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை
-
8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து; இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!
-
கலிபோர்னியாவில் தேசிய படைகள் குவிப்பு; டிரம்ப்புக்கு நீதிமன்றம் அனுமதி
-
பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!