மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்ட பூஜை
கிருஷ்ணராயபுரம்,
லாலாப்பேட்டை, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் பள்ளிக்கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, பெரம்பலுார் எம்.பி., அருண்நேரு ஆகியோர் தலைமையில் பள்ளி கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
பெரம்பலுார் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 45 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு பள்ளிக்கட்டடம் கட்டப்படுகிறது. நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலர் கதிரவன், தெற்கு ஒன்றிய செயலர் கரிகாலன், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பிரபாகரன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
முருகன் மாநாட்டுக்கு 'இ--பாஸ்' ஐகோர்ட்டை அணுக அறிவுரை
-
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வலிமை பெற வேண்டும்; மத்திய தொலைத்தொடர்பு துறை செயலர் மிட்டல் பேச்சு
-
ஊட்டி நகருக்கான குடிநீர் வினியோக பிரச்னைக்கு... விடிவு பிறக்குமா.. . ? வனத்துறை அனுமதி கிடைத்தால் தீர்வு நிச்சயம்
-
அணைகள் நீர்மட்டம்
-
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி
-
கொள்முதல் நிலையங்களில் பசுந்தேயிலை வரத்து உயர்வு