நீர்நிலைகளில் மண் கடத்தல் கிராம மக்கள் புகார் மனு
உடுமலை : உடுமலை அருகே நீர்நிலைகளில் இருந்து, இரவு நேரங்களில் கிராவல் மண் திருடப்பட்டும், வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சிக்குட்பட்ட ராமச்சந்திராபுரம் மற்றும் இதர கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் இருந்து இரவு நேரங்களில், கிராவல் மண் கடத்தப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிம வளத்துறைக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
ராமச்சந்திராபுரம் உப்பாறு ஓடை, பெருமாள் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து இரவு நேரங்களில், கிராவல் மண் கடத்துகின்றனர். இது குறித்து வருவாய்த்துறையினருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
நாள்தோறும் நுாற்றுக்கணக்கான லோடு மண் அள்ளப்படுவதால், நீர்நிலைகள் காணாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது; மழைக்காலங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும், கனரக வாகனங்களை கொண்டு மண் கடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: மத்திய பெட்ரோலிய அமைச்சர் உறுதி
-
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா குழு பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!
-
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
-
ஆர்ப்பரித்த அதிரப்பள்ளி அருவி தொலைவில் இருந்து ரசிக்கலாம்
-
முருக பக்தர்கள் மாநாடு: கின்னஸ் சாதனை படைக்க திட்டம்
-
சீமான் மீது வழக்கு பதியாவிட்டால் போராட்டம்: கிருஷ்ணசாமி மிரட்டல்