தும்மனட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பி.டி.ஏ., கூட்டம்

கோத்தகிரி : கோத்தகிரி தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது.

சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவுசல்யா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீனிவாசன், நடப்பு கல்வி ஆண்டுக்கான செயல்பாடுகள் குறித்து பெற்றோரிடம் விளக்கி பேசினார்.

கூட்டத்தில், 'நடப்பாண்டு, 100 க்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை நடந்ததற்கு, ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது; பஸ் வசதி இல்லாத ஐந்து வழித்தடங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்த, 50 சதவீதம் வாகன கட்டண தொகையை பெற்றோர் ஆசிரியர் கழகம் பெற்று கொள்வது;பள்ளி மாணவர்களுக்கு பாடத்துடன், வாழ்க்கை முறை கல்வி மற்றும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்குவது,' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில், தும்மனட்டி கிராம தலைவர் ராமகிருஷ்ணன், நாக்கு பெட்டா நல சங்க தலைவர் பாபு, செயலாளர் தருமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement