பாதிக்கப்பட்டோரை அடையாளம் காட்டக்கூடாது: பாலியல் வழக்கில் போலீசாருக்கு ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை: பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடாது என போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக சென்னையில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, குற்றம் சாட்டப்பட்டவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூன் 20) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருந்தது. இதற்கு ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் அதிருப்தி தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி கூறியதாவது:
* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும்.
* அடையாளங்களை வெளிப்படுத்த கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை.
* பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் அடையாளங்களை எந்த வடிவத்திலும் வெளிப்படுத்தக்கூடாது என போலீசார் மற்றும் தமிழக டி.ஜி.பி.,க்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், மீறினால் வழக்கை விசாரித்த போலீசார் பொறுப்பாக்கப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும்
-
பெண்கள் பாஸ்போர்ட் பெற கணவன் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட்
-
புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு
-
திண்டுக்கல்லில் பாஜ, மார்க்சிஸ்ட் மோதல்; நிர்வாகிகள் பலத்த காயம்
-
நைஜர் நாட்டில் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர்கள் 34 பேர் உயிரிழப்பு; தீவிர தேடுதல் வேட்டை!
-
அசாம் காங்.க்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகளின் 5000 சமூக ஊடக கணக்குகள்; முதல்வர் குற்றச்சாட்டு
-
ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதல்