புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: புதியதாக வாங்கப்படும் அனைத்து வகை இருசக்கர வாகனங்களுடன் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
நாட்டில் சாலை விபத்துகளை குறைத்து, வாகன ஓட்டுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு சில பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்து உத்ரவிட்டுள்ளது. அதன்படி, 2026ம் ஆண்டு ஜனவரி முதல் விற்பனையாகும் அனைத்து வகை இரு சக்கர வாகனங்களுடன் கட்டாயமாக, இந்திய தர நிர்ணயத்தால் (BIS) சான்றளிக்கப்பட்ட 2 ஹெல்மெட்டுகளை வழங்கவேண்டும் என்று கூறி உள்ளது.
இதேபோன்று ஏபிஎஸ் (ABS) என்ற நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட பிரேக் அமைப்புகள் பொருத்தப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த புதிய விதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அமைச்சகம் விரைவில் வெளியிடும். நாடு முழுவதும் மொத்தமாக பதிவாகும் சாலை விபத்துகளில் இறக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் 44 சதவீதம் பேர்.
மேலும் தற்போது 125 CCக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே ABS பாதுகாப்பு கட்டாயமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும்
-
வால்பாறையில் சிறுத்தை தாக்குதல்; 5 வயது சிறுமியை தேடும் பணி தீவிரம்
-
ஈரான் - இஸ்ரேல் போரில் டிரம்ப் 2 வார காத்திருப்பின் அர்த்தம்; வெளியான புதிய பின்னணி
-
7ம் நாளாக இந்தியாவில் நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானம்; காரணம் இதுதான்!
-
டிரம்ப் அழைப்பை நிராகரித்தது ஏன்: பிரதமர் மோடி விளக்கம்
-
இந்திய மாணவர்களுக்கு ஈரான் ஸ்பெஷல் அனுமதி: 1000 பேர் வெளியேற வான்வெளி திறப்பு
-
பெண்கள் பாஸ்போர்ட் பெற கணவன் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட்