அரையிறுதியில் துளசிமதி * ஆசிய பாரா பாட்மின்டனில்...

கொராத்: தாய்லாந்தின் கொராத் நகரில் ஆசிய பாரா பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் (எஸ்.யு.5), இந்தியாவின் துளசிமதி (தமிழகம்), ஜப்பானின் சுகினோவை சந்தித்தார். துளசிமதி 21-6, 21-15 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் இரட்டையர் காலிறுதியில் (எஸ்.எல்.3) இந்தியாவின் துளசிமதி, மானசி ஜோஷி ஜோடி, இந்தியாவின் பாலக் கோலி, தாய்லாந்தின் சனிதா ஜோடியை 21-10, 21-16 என வீழ்த்தியது.
கலப்பு இரட்டையர் 'ரவுண்டு-16' போட்டியில் துளசிமதி, நிதேஷ் ஜோடி, 21-14, 21-11 என சக இந்தியாவின் சஞ்சனா, ஜதின் ஆசாத் ஜோடியை வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.

Advertisement