முதல்வர் திறந்து 3 நாட்களில் இடிந்த புதிய கட்டடம்: உதவி பொறியாளர் சஸ்பெண்ட்

தஞ்சை; முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய கட்டடத்தில், மூன்றே நாளில் கூரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவத்தில் உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், சூரியனார்கோவில் பஞ்., அலுவலக கட்டடம், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது. தஞ்சாவூரில் ஜூன் 16ல் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் இந்த கட்டடத்தை திறந்து வைத்தார்.
முன்னதாக, முதல்வர் திறப்பதற்கு முந்தைய நாள் இரவு, புதிய கட்டடத்தின் கூரையில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அடுத்த நாள் திறப்பு விழா என்பதால், உடனடியாக அவசர கதியில் பெயர்ந்த பூச்சை மீண்டும் பூச்சு வேலை செய்து சீரமைத்தனர்.
அதன்பின், ஜூன் 16ல் முதல்வர் கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர் அலுவலகத்தில் தளவாடப் பொருட்களை வைப்பதற்காக, அலுவலக கட்டடத்தை ஊழியர்கள் திறந்தனர்.
அப்போது, சிமென்ட் பூச்சு மீண்டும் பெயர்ந்து விழுந்திருந்தது. இதனால் உள்ளே செல்ல பயந்து, ஊழியர்கள் நடுங்கினர். தகவலறிந்த உள்ளூர் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந் நிலையில், கட்டுமான விதிகளை பின்பற்றாத ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். மேலும், உதவி செயற்பொறியாளர் சுமதி மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
ஸ்டாலின் குறித்து கார்ட்டூன் வெளியிடுவோம்: தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., எச்சரிக்கை
-
யார் கூட்டு சேர்ந்தாலும் தி.மு.க., வெல்லும்
-
'முதல்வர் மாவகம் என பெயர் வைத்திருக்கலாம்'
-
'நெல் கொள்முதலில் ரூ.811 கோடி முறைகேடு: முதல்வர் பதில் என்ன?'
-
த.வெ.க., நிகழ்ச்சியில் மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்ததால் சர்ச்சை
-
பழனிசாமி குறித்து அவதுாறுபோலீசில் அ.தி.மு.க.,புகார் * வெளியில் விரட்டிய போலீசாரால் சர்ச்சை