பழனிசாமி குறித்து அவதுாறுபோலீசில் அ.தி.மு.க.,புகார் * வெளியில் விரட்டிய போலீசாரால் சர்ச்சை
சிவகங்கை:முன்னாள் முதல்வர் பழனிசாமி குறித்து அவதுாறாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டோர் மற்றும் தி.மு.க., ஐ.டி., பிரிவு செயலாளர் அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கையில் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்க சென்ற அ.தி.மு.க.,வினரை போலீசார் வெளியே விரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவதுாறு கார்ட்டூன் வெளியிட்ட தி.மு.க., ஐ.டி., பிரிவு செயலாளர் ராஜா மற்றும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டோர் மீது தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000, பி.என்.எஸ்., சட்டம் 2023 ன்படி நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்நாதன் தலைமையில் கட்சியினர் சிவகங்கையில் எஸ்.பி., ஆஷிஷ் ராவத்திடம் புகார் அளிக்க சென்றனர். ஒரே புகாரை அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு என மூன்று மனுக்களாக பிரித்து வழங்கினர். எம்.எல்.ஏ., தலைமையில் எஸ்.பி.,யிடம் மனு அளிக்க முதல் தளத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு கட்சியினர் சென்றனர். 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி, மற்றவர்கள் வெளியே செல்லுங்கள் என அங்கிருந்த போலீசார் அ.தி.மு.க.,வினரை விரட்டினர். ஒரே விதமான புகாருக்கு ஏன், இத்தனை முறை மனு அளிக்க வருகிறீர்கள் என எஸ்.பி.,யும் அ.தி.மு.க.,வினரிடம் கடிந்து கொண்டதாக கட்சியினர் தெரிவித்தனர். போலீசாரின் நடவடிக்கை அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும்
-
சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானை: அச்சத்தில் பெற்றோர்
-
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு அடுத்த மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
-
அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி
-
அணைகள் நீர்மட்டம்
-
பழுதடைந்த அரசு பஸ்கள் பயணம் செய்ய பயணிகள் அச்சம்
-
யானை வழித்தடத்தில் மின்வேலி அகற்றும் பணியை... திசை திருப்ப முயற்சி! மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்தால் விபரம் புரியும்