அரசு பஸ்சில் கியர் ராடு கட்டானதால் பரபரப்பு



கோபி, கோபியில் இருந்து பெருந்துறை செல்லும், ௭ம் நெம்பர் அரசு டவுன் பஸ், 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று சென்றது. வடுகபாளையம் என்ற இடத்தில் காலை, 10:50 மணிக்கு சென்றபோது, 'கியர்' ராடு உடைந்து விட்டது.

இதனால் சுதாரித்த டிரைவர், பஸ்சை ஓரங்கட்டி நிறுத்தினார். பயணிகள் காயமின்றி இறக்கி விடப்பட்டு, மாற்று அரசு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement