சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை தப்ப முயன்ற உறவினருக்கு 'மாவுக்கட்டு'

கடலுார்:கடலுார் அருகே மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது நபர். இவருக்கு மனைவி, இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்று குழந்தைகளுடன் தாய், திருவண்ணாமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 25 வயது நபரான உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 17ம் தேதி இரவு திடீரென 3 வயது சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டதால், திண்டிவனம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி இறந்து விட்டதாக கூறினர்.
சிறுமியின் உடலை எடுத்துக்கொண்டு தாய், மற்ற குழந்தைகளுடன் சிதம்பரத்திற்கு பஸ்சில் வருவதாக அவரது கணவருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால், சிறுமியின் தாய் வர தாமதமானதால் உறவினர்கள் கடலுார் பஸ் ஸ்டாண்டு வந்தனர்.
கடலுார் உழவர் சந்தை அருகே இறந்த சிறுமியின் உடலுடன் தாய் நிற்பதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அருகில் சென்று பார்த்த போது, சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள், கடலுார் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக சிறுமியின் தாய், உறவினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
சிறுமியை கொலை செய்த உறவினரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து கடலுார் அழைத்து வந்தனர். அப்போது, குமத்தான்மேடு சோதனை சாவடி அருகே சிறுநீர் கழிக்க இறக்கி விடப்பட்ட அவர், போலீசாரிடம் இருந்து தப்பிக்க பெண்ணையாற்றின் பாலத்தில் இருந்து கீழே குதித்த போது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உடன், சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் தாயிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் ஜூன் 27 வரை மழை பெய்ய வாய்ப்பு
-
ஈரானின் 3 அணுஉலைகள் மீது வெற்றிகரமாக அமெரிக்கா குண்டுவீச்சு: அமெரிக்க அதிபர் டிரம்ப்
-
கர்நாடகாவுடன் பேச மஹாராஷ்டிரா குழு அமைப்பு! 814 கிராமங்களுக்கு தொடர்ந்து குறி
-
சொந்த மாநில உணவை 'மிஸ்' செய்றீங்களா! 'டோன்ட் வொரி' 'மா கா துலார்' இருக்கே
-
காகங்களுக்கு உணவளிக்கும் 'மாமனிதன்'
-
பள்ளி நேரம் முடிந்ததும் விவசாயம்: அரசு பள்ளி மாணவர்கள் புதிய முயற்சி