ஈரான்-இஸ்ரேல் விவகாரம்: டில்லியில் தமிழர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறப்பு

1

சென்னை: இஸ்ரேல்-ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில், டில்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஈரான்-இஸ்ரேலில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரினால், அங்குள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு பிரச்னை எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு, "ஆபரேஷன் சிந்து " மூலம் இந்தியர்களை மீட்டு வருகிறது.

அதை தொடர்ந்து, தமிழக அரசு, இஸ்ரேல்-ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

உதவி தேவைப்படுவோர் 011-24193300, 9289516712 ,எண்களிலும் இ-மெயில் முகவரி:tnhouse@tn.gov.in,procofficetnh@gmail.com ஆகிய முகவரியில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement