லீட்ஸ் டெஸ்ட்: 3 வீரர்கள் சதம் அடித்து வலுவான நிலையில் இந்தியா

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் 3 பேர் சதம் அடித்தனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) நான்காவது சீசன் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன்-சச்சின்' டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லீட்சில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி, 3 விக்கெட்டுக்கு 359 ரன் எடுத்திருந்தது. சுப்மன் (127), ரிஷாப் பன்ட் (65) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. இதில் ரிஷப் பன்ட் 178 பந்துகளை எதிர்கொண்டு, 134 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். இதனை தொடர்ந்து இந்திய அணி, உணவு இடைவெளிக்கு பிறகு முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 471 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணி தரப்பில், ப்ரிடன் கார்ஸ் 5 விக்கெட்டுகளையும், வோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisement