பழநியிலிருந்து இரவு நேர ரயில்கள் உபயோகிப்பாளர்கள் வேண்டுகோள்
பழநி:பழநி மார்க்கமாக இரவு நேர ரயில்களை இயக்க பழநி ரயில் உபயோகிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பழநிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பழநியில் இருந்து செல்ல இரவு நேர ரயில்கள் இல்லை. திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரம் வரை ரயில் இரவு 10:00 மணிக்கு மேல் தினமும் பழநியில் இருந்து கிளம்பும் வகையில் செயல்படுத்த வேண்டும். சென்னை சென்ட்ரல் முதல் பாலக்காடு வரை இயக்கும் ரயிலில் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் டிக்கெட் கிடைப்பது சிரமமாக உள்ளது. இதை கருதி கோவை முதல் பழநி வழியாக மயிலாடுதுறைக்கு ரயில் இயக்க வேண்டும். இதனால் கும்பகோணம் கோயில்களுக்கு செல்வது எளிதாக இருக்கும். திருச்செந்துார் செல்ல புதிய ரயிலை முன்பதிவு வசதியுடன் இரவு நேரத்தில் இயக்கவும் வழி செய்ய வேண்டும். கோவையில் இருந்து காலை 6:15 மணிக்கு கிளம்பும் திருப்பதி ரயிலை பழநி வரை நீடிக்க பழநி உபயோகிப்பாளர் சங்கத்தினர் கேட்டுள்ளனர்.
மேலும்
-
மதுரையில் இன்று பிரமாண்ட முருக பக்தர்கள் மாநாடு
-
தி.மு.க., அணியில் புகைச்சல்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு தனி பதிவெண் தர வேண்டும் பல இடங்களில் மருந்து வாங்குவதால் அரசுக்கு இழப்பு
-
தொழில்துறை தமிழகத்தில் சிக்கி சீரழிந்து வருகிறது புள்ளிவிபரங்களுடன் அ.தி.மு.க., குற்றச்சாட்டு
-
செயின் திருவிழாவில் சிறப்பு ஆபர் இன்று ஒருநாள் மட்டும்
-
டாடா ஸ்டீல் பென்சிங் போஸ்ட் அறிமுகம்