கட்டட தொழிலாளி தற்கொலை
வானுார் : வானுார் அடுத்த பெரம்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன், 48; கட்டட தொழிலாளி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முதுகு தண்டுவடப்பிரச்னைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகும் வலி குறையவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வலி அதிகரித்துள்ளது.
வலி தாங்க முடியாமல், நேற்று காலை அதே பகுதியில் உள்ள குளத்தின் அருகில் மரத்தில் துாக்கில் தொங்கினார். உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது மனைவி சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் வானுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகாவுடன் பேச மஹாராஷ்டிரா குழு அமைப்பு! 814 கிராமங்களுக்கு தொடர்ந்து குறி
-
சொந்த மாநில உணவை 'மிஸ்' செய்றீங்களா! 'டோன்ட் வொரி' 'மா கா துலார்' இருக்கே
-
காகங்களுக்கு உணவளிக்கும் 'மாமனிதன்'
-
பள்ளி நேரம் முடிந்ததும் விவசாயம்: அரசு பள்ளி மாணவர்கள் புதிய முயற்சி
-
'சின்னஞ்சிறு வண்ணப்பறவை'யின் வியக்க வைக்கும் ஆர்வம்
-
'ஏழடி' போர்வெல்; கோவையில் நடந்த பெருங்கூத்து!
Advertisement
Advertisement