அண்ணாமலையிடம் விசாரிக்க கோரி வழக்கு

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில், பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு:
சென்னை அண்ணா பல்கலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கடந்தாண்டு சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தி.மு.க., அனுதாபி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், ஜூன் 2ல் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்விவகாரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 'ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார் யாரிடம் மொபைல் போனில் பேசினார்' என்ற ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார்.
அதுபோல, உரையாடல் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறிய அண்ணாமலை, அந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்கவில்லை. இவ்விவகாரத்தில், அண்ணாமலைக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் ஜூன் 27 வரை மழை பெய்ய வாய்ப்பு
-
ஈரானின் 3 அணுஉலைகள் மீது வெற்றிகரமாக அமெரிக்கா குண்டுவீச்சு: அமெரிக்க அதிபர் டிரம்ப்
-
கர்நாடகாவுடன் பேச மஹாராஷ்டிரா குழு அமைப்பு! 814 கிராமங்களுக்கு தொடர்ந்து குறி
-
சொந்த மாநில உணவை 'மிஸ்' செய்றீங்களா! 'டோன்ட் வொரி' 'மா கா துலார்' இருக்கே
-
காகங்களுக்கு உணவளிக்கும் 'மாமனிதன்'
-
பள்ளி நேரம் முடிந்ததும் விவசாயம்: அரசு பள்ளி மாணவர்கள் புதிய முயற்சி