பழங்குடி மாணவர்களின் உயர்தொழில்நுட்பக்கல்வி கனவுத்திட்டம் முடக்கம் ஒருவர்கூட பயன்பெறவில்லை
மதுரை:பழங்குடி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் உயர்தொழில்நுட்பக்கல்வி கனவுத்திட்டம் 12 ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இதுவரை ஒரு மாணவர்கூட பயன்பெறவில்லை.
பழங்குடி மாணவர்கள் ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., உயர் தொழில்நுட்பக்கல்லுாரிகளில் சேர்ந்து படிக்கும் கனவுத்திட்டம் 2013-14ம் கல்வியாண்டில் முதன்முறையாக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டிற்கு 50 தகுதியானவர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.ஒரு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஆரம்பிக்கப்பட்ட அதே ஆண்டில் 'நிர்வாக காரணங்களுக்காக' என்று கூறி முடக்கப்பட்ட இத்திட்டம் 12 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. ஒருவர்கூட இத்திட்டத்தால் பயன்பெறவில்லலை.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இதை அறிந்த மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக் கூறியதாவது: உயர் தொழில்நுட்பக்கல்லுாரிகளில் சேரும் பழங்குடி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதை அதிகரிக்கதான் கனவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 50 மாணவர்களை தேர்வு செய்து ஒருவருக்கு தலா ரூ.ஒரு லட்சம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டது.என்ன நிர்வாக காரணங்களுக்காக இத்திட்டம் 12 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை.
இதனால் பழங்குடி மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் செயல்பட்டிருந்தால் 12 ஆண்டுகளில் 600 பழங்குடி மாணவர்கள் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்திருப்பார்கள்.
மாணவர்களின் நலன்கருதி இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து சிறப்பாக செயல்பட கல்வியாளர்கள், சமூகஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அலுவலர்களை உள்ளடக்கிய குழு உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் ஜூன் 27 வரை மழை பெய்ய வாய்ப்பு
-
ஈரானின் 3 அணுஉலைகள் மீது வெற்றிகரமாக அமெரிக்கா குண்டுவீச்சு: அமெரிக்க அதிபர் டிரம்ப்
-
கர்நாடகாவுடன் பேச மஹாராஷ்டிரா குழு அமைப்பு! 814 கிராமங்களுக்கு தொடர்ந்து குறி
-
சொந்த மாநில உணவை 'மிஸ்' செய்றீங்களா! 'டோன்ட் வொரி' 'மா கா துலார்' இருக்கே
-
காகங்களுக்கு உணவளிக்கும் 'மாமனிதன்'
-
பள்ளி நேரம் முடிந்ததும் விவசாயம்: அரசு பள்ளி மாணவர்கள் புதிய முயற்சி