மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம்

மதுரை: மதுரையில் முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு இன்று (ஜூன் 22) மதியம் 3:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டில், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், மடாதிபதிகள், ஹிந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்.

மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் 'குன்றம் காக்க.. கோயிலை காக்க...' எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு இன்று (ஜூன் 22) மதியம் 3:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. மாநாடு இரவு 8:00 மணி வரை நடைபெற உள்ளது.

8 லட்சம் சதுர அடி பரப்பு மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 6 அடி உயரத்தில் சிறிய மேடையும், அதன் பின் 10 அடி உயரத்தில் பெரிய மேடையும் உள்ளது. மேடையின் மையத்தில் முருகன் வேலுடன் நிற்பது போன்ற பதாகையும், அதன் பின் கோவில் கோபுரமும், குன்றமும் இருக்கும் படி அமைக்கப்பட்டு உள்ளது.







கந்தசஷ்டி கவசம்
மாநாட்டில், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், மடாதிபதிகள், ஹிந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மைதானம் முழுவதும் முருக பக்தர்கள் குவிந்துள்ளனர். மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாலை 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது. 5 லட்சம் பேர் கந்தசஷ்டி கவசம் பாடுகின்றனர்.
அமைச்சருக்கு சவால்
மாநாட்டில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வரவேற்றுப் பேசினார். அவர் பேசுகையில், ''முருக பக்தர்கள் மாநாட்டிற்கு விளம்பரத்தைத் தேடிக் கொடுத்த திருமாவளவன், அமைச்சர் சேகர் பாபுக்கு எனது பாராட்டுக்கள். நாங்கள் நடத்தும் மாநாட்டிற்கு கணக்குக் காட்ட தயார்; கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பணம் எந்த தொழிலதிபர்களிடமிருந்து பெற்றது, அதில் எவ்வளவு ஊழல் நடந்தது என வெளியிட அமைச்சர் சேகர்பாபு தயாரா,'' என்று கேள்வி எழுப்பினார்.
கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
மாநாட்டு வளாகம் முழுவதும் 18 எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. திரையை பார்த்து பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 1,000 லிட்டர் தண்ணீர் டேங்குகள், 200 கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
தினமலர் இணையத்தில் நேரலை!
முருக பக்தர்கள் மாநாட்டை நேரலையில், காண இங்கே கிளிக் செய்யவும்







மேலும்
-
தடைகளை தாண்டி நடந்த முருக பக்தர்கள் மாநாடு: காடேஸ்வரா சுப்பிரமணியம் பெருமிதம்!
-
நக்சல் ஒழிப்பு நடவடிக்கை,மழைக் காலத்திலும் தொடரும்: அமித்ஷா திட்டவட்டம்
-
தொழில் துறையில் தமிழகம் பின்தங்கியதற்கு 2026 தேர்தலில் பரிசு கிடைக்கும்: இ.பி.எஸ்.,
-
நிதேஷ் குமார் 'தங்கம்': ஆசிய பாரா பாட்மின்டனில்
-
நட்பு கால்பந்து: இந்தியா 'டிரா'
-
'டி-20' உலக கோப்பை: கனடா அணி தகுதி