ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

புதுடில்லி: அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசினார்.
இஸ்ரேல்- ஈரான் போர் தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தாக்குதலில் இறங்கியது. ஈரானின் முக்கிய அணு சக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியுள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதட்டம் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார்.
ஈரான் அணு சக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதல்கள் குறித்த தன் கவலைகளை பிரதமர் மோடி ஈரான் அதிபரிடம் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் பதட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை மூலம் மோதல்களை தீர்க்க, ராஜதந்திர அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யுனெஸ்கோ பட்டியலில் சோன்பத்ரா சால்கான் பூங்கா சேர்ப்பு
-
ஆபத்தில் ஆழ்த்தும் போரை தவிர்க்க வேண்டும்; போப் லியோ வேண்டுகோள்
-
தொடர் நெருக்கடியால் தவிக்கும் ஏர் இந்தியா; விமான சேவை 5 சதவீதம் குறைப்பு!
-
ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்: ஈரானின் அணு சக்தி நிலையங்களில் 25 நிமிடம் தாக்குதல் எப்படி?அமெரிக்கா விளக்கம்
-
தடைகளை தாண்டி நடந்த முருக பக்தர்கள் மாநாடு: காடேஸ்வரா சுப்பிரமணியம் பெருமிதம்!
-
நக்சல் ஒழிப்பு நடவடிக்கை,மழைக் காலத்திலும் தொடரும்: அமித்ஷா திட்டவட்டம்
Advertisement
Advertisement