ஆபத்தில் ஆழ்த்தும் போரை தவிர்க்க வேண்டும்; போப் லியோ வேண்டுகோள்

ரோம்: போர் பிரச்னைகளை தீர்க்காது. ஆபத்தில் ஆழ்த்தும் போரை தவிர்க்க வேண்டும் என மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில் போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
போர் பிரச்னைகளைத் தீர்க்காது. மாறாக, பெரிய காயங்களை ஏற்படுத்துகிறது.
வன்முறை மற்றும் மோதல் வேண்டாம். அபாயத்தை ஏற்படுத்தும் போரைத் தவிர்க்க சர்வதேச சமூகம் பாடுபட வேண்டும். மோதலுக்குப் பதிலாக ராஜதந்திரம் இருக்க வேண்டும்.
போரின் துயரம் சரிசெய்ய முடியாத படுகுழியாக மாறுவதற்கு முன்பு அதை தடுக்க வேண்டும். மத்திய கிழக்கிலிருந்து, குறிப்பாக ஈரானிலிருந்து, தொடர்ந்து அச்சமூட்டும் செய்திகள் வெளிவருகின்றன.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் உள்ளிட்ட இந்த துயரமான பின்னணியில், குறிப்பாக காசாவில் மனிதாபிமான உதவிக்கான தேவை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



மேலும்
-
ஆபரேஷன் சிந்துார் ஒரு திருப்பு முனை நிகழ்வு: தமிழக கவர்னர் புகழாரம்
-
ஆளும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி; அண்ணாமலை
-
ஈரான் நாட்டு மக்கள் மீது குறி வைக்கவில்லை: சொல்கிறார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்
-
இஸ்ரேலில் இருந்து புறப்பட்டது 160 பேர் கொண்ட முதல் குழு: இந்திய துாதரகம்
-
திண்டுக்கல் 'திரில்' வெற்றி: சேலம் அணி ஏமாற்றம்
-
டிரம்புடன் பேசும் திட்டமே எங்களிடம் இல்லை:ஈரான் விவகாரத்தில் ரஷ்யா திட்டவட்டம்