ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்: ஈரானின் அணு சக்தி நிலையங்களில் 25 நிமிடம் தாக்குதல் எப்படி?அமெரிக்கா விளக்கம்

வாஷிங்டன்: ஈரானின் அணு சக்தி நிலையங்களில், 7 B-2 குண்டுவீச்சு விமானங்கள் உட்பட 125 க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் 25 நிமிடங்களில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
ஈரானின் நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்று பெயரிடப்பட்டது.
ஈரானில் 25 நிமிடம் நடத்திய தாக்குதல் குறித்து, கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் கூறியதாவது: ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் 7 B-2 குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டது.
இஸ்பஹானில் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. பார்டோ, நடான்ஸ் அணு மின் நிலையங்கள் மீது 14 பதுங்கு குழி வெடிகுண்டுகள் வீசப்பட்டன. 125க்கும் மேற்பட்ட விமானங்களில் இருந்து குண்டுகள் வீசப்பட்டது. குண்டு வீச்சாளர்கள் பார்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் அமெரிக்க நேரப்படி நேற்று மாலை 6.40 மணிக்கு வான்வழி வாயிலாக தாக்குதல் நடத்தினர்.
மாலை 5 மணியளவில் ஈரானில் உள்ள இஸ்பஹான் அணுசக்தி நிலையங்களில், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பி-2 குண்டுவீச்சு விமானம், பார்டோ அணுசக்தி நிலையங்களில், அமெரிக்க நேரப்படி நேற்று மாலை 6.40 மணிக்கு இரண்டு பெரிய பதுங்கு குழி குண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது.
மீதமுள்ள குண்டுவீச்சு விமானங்கள் பின்னர் தங்கள் இலக்குகளைத் தாக்கின. பின்னர் அமெரிக்க ராணுவத்தினர் வீடு திரும்ப துவங்கினர். ஈரானுக்குள் நுழையும் போதோ அல்லது வெளியேறும் போதோ எந்த துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லை. இவ்வாறு 25 நிமிட தாக்குதல் குறித்து, கெய்ன் விளக்கம் அளித்துள்ளார்.


மேலும்
-
ஆபரேஷன் சிந்துார் ஒரு திருப்பு முனை நிகழ்வு: தமிழக கவர்னர் புகழாரம்
-
ஆளும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி; அண்ணாமலை
-
ஈரான் நாட்டு மக்கள் மீது குறி வைக்கவில்லை: சொல்கிறார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்
-
இஸ்ரேலில் இருந்து புறப்பட்டது 160 பேர் கொண்ட முதல் குழு: இந்திய துாதரகம்
-
திண்டுக்கல் 'திரில்' வெற்றி: சேலம் அணி ஏமாற்றம்
-
டிரம்புடன் பேசும் திட்டமே எங்களிடம் இல்லை:ஈரான் விவகாரத்தில் ரஷ்யா திட்டவட்டம்