தொடர் நெருக்கடியால் தவிக்கும் ஏர் இந்தியா; விமான சேவை 5 சதவீதம் குறைப்பு!

1

புதுடில்லி: பாதுகாப்பு, தொழில்நுட்ப கோளாறு என தொடர் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா, விமான சேவைகளை 5 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது.



ஆமதாபாத் விமான விபத்து ஏற்படுத்திய தாக்கம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. தொழில்நுட்ப கோளாறு, விமானம் மீது பறவை மோதல் போன்ற காரணங்களினால் பயணிகளின் பாதுகாப்பு பற்றிய கேள்விகள் எழுந்தன.


ஏர் இந்தியா விமானங்களில் முன்பதிவு செய்தோர் மற்றும் அதில் பயணிக்க முன்னரே திட்டமிட்ட பலர், மாற்று விமான நிறுவனங்களின் சேவையை நாட ஆரம்பித்துள்ளனர்.


தொடரும் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொண்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம் தற்போது பல்வேறு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் உள்ள நகரங்களுக்கான விமான சேவையை ஜூலை 15ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்தும், அதன் சேவைகளை குறைத்தும் அறிவித்துள்ளது.


இதற்கான அறிவிப்பை அந் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது தவிர பல்வேறு நகரங்களுக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையையும் குறைத்து அறிவித்துள்ளது.


இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;


சர்வதேச அளவில் ஏர் இந்தியாவின் ஒட்டுமொத்த விமான சேவையில் 5 சதவீதம் பயணங்கள் தற்காலிகமாக குறைக்கப்படுகிறது. இது தாமாக முன் வந்து எடுக்கப்பட்ட முடிவாகும். குறிப்பாக 3 வழித்தடங்களிலும் தற்காலிகமாகவும், 19 வழித்தடங்களில் விமான சேவைகளும் குறைக்கப்படுகின்றன. இந்த அறிவிப்பு குறைந்தபட்சம் ஜூலை 15ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.


ஏர் இந்தியாவின் பரந்துபட்ட நெட்வொர்க் அளவிலான செயல்பாடுகளை வலுப்படுத்தவும், பயணிகளுக்கு கடைசி நேர சிரமத்தை குறைப்பதுமே இதன் நோக்கம்.


தற்காலிக சேவை குறைப்புகள் இருந்தாலும், தினமும் 600 விமானங்களை தொடர்ந்து இயக்கும். 120 உள்நாட்டு, குறுகிய மற்றும் சர்வதேச வழித்தடங்களில் சிறிய வணிக விமானங்கள் இயக்கப்படும்.


இவ்வாறு ஏர் இந்தியா கூறி உள்ளது.


ஜூலை 15, 2025 வரை ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள் விவரம்;




* பெங்களூரு-சிங்கப்பூர் (AI 2392/2393) - வாரம்தோறும் 7 சேவைகள்




* புனே-சிங்கப்பூர் (AI 2111/2110) - வாரம்தோறும் 7 சேவைகள்




* மும்பை-பாக்டோக்ரா (AI 551/552) - வாரம்தோறும் 7 சேவைகள்




ஜூலை 15, 2025 வரை குறைக்கப்பட்ட விமான சேவைகள் விவரம்; (ஏற்கனவே இருந்த விமான சேவைகள் அடைப்புக் குறிக்குள்)




* பெங்களூரு-சண்டிகர்; வாரம்தோறும் 7 சேவைகள் (14)



* டில்லி-பெங்களூரு: வாரம்தோறும் 113 சேவைகள் (116)




* டில்லி-மும்பை: வாரம்தோறும் 165 சேவைகள் (176)




* டில்லி-கொல்கத்தா: வாரம்தோறும் 63 சேவைகள் (70)




* டில்லி-கோயம்புத்தூர்: வாரம்தோறும் 12 சேவைகள்( 13)




* டில்லி-கோவா (டபோலிம்): வாராந்திரம் 7 சேவைகள் (14)




* டில்லி-கோவா (மோபா): வாரம்தோறும் 7 சேவைகள்( 14)




* டில்லி-ஹைதராபாத்: வாரம்தோறும் 76 சேவைகள்( 84)




* டில்லி-இந்தூர்: வாரம்தோறும் 14 சேவைகள் (21)




* டில்லி-லக்னோ: வாரம்தோறும் 21 சேவைகள்(28)




* டில்லி-புனே: வாரம்தோறும் 54 சேவைகள் (59)




* மும்பை-ஆமதாபாத்: வாரம்தோறும் 37 சேவைகள் (41)




* மும்பை-பெங்களூரு: வாரம்தோறும் 84 சேவைகள்(91)




* மும்பை-கொல்கத்தா: வாரம்தோறும் 30 சேவைகள்(42)




* மும்பை-கோயம்புத்தூர்: வாரம்தோறும் 16 சேவைகள்(21)




* மும்பை-கொச்சி: வாரம்தோறும் 34 சேவைகள் (40)




* மும்பை-கோவா (டபோலிம்): வாரம்தோறும் 29 சேவைகள் (34)




* மும்பை-ஹைதராபாத்: வாரம்தோறும் 59 சேவைகள் (63)




* மும்பை-வாரணாசி: வாரம்தோறும் 7 சேவைகள் (12)


இத்தகைய மாற்றங்களால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தங்குமிடம், மாற்று விமானங்கள் மூலம் பயணம் அல்லது பயணக்கட்டணம் முழுமையாக திருப்பி தருதல் போன்ற வசதிகள் செய்து தரப்படும்.


புதிய விமான சேவைகள் கால அட்டவணை, ஏர் இந்தியாவின் வலைதளமான airindia.comல் பதிவேற்றப்பட்டுள்ளது. வெகு விரைவில் முழுமையான விமான சேவைகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் வகையிலும், பயணிகள், விமானிகள், சிப்பந்திகள் பாதுகாப்பில் உறுதியாக உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


இவ்வாறு ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

Advertisement