இஸ்ரேலில் இருந்து புறப்பட்டது 160 பேர் கொண்ட முதல் குழு: இந்திய துாதரகம்

ஜெருசலேம்: ஆபரேஷன் சிந்துவின் கீழ், இஸ்ரேலில் இருந்து 160 பேர் கொண்ட முதல் குழு தாயகம் புறப்பட்டதாக இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஈரான் போரின் காரணமாக, இஸ்ரேல் அந்நாட்டு வான்வெளியை மூடியதால், விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தியா ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் இந்தியர்கள், தாயகம் திரும்ப ஏற்பாடு செய்துள்ளது. ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ், இன்று 160 இந்தியர்கள் புறப்பட்டதாக இந்திய துாதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய துாதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள், ஈரானில் இருந்து வரும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களிலிருந்து தப்பிக்க போராடும் நிலை உள்ளது. பதுங்கு குழிகள் மற்றும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பான அறைகளில் அடிக்கடி தஞ்சம் புக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அவர்களை இங்கிருந்து பாதுகாப்பாக தாயகம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்த நிலையில், முதல் குழுவாக 160 பேர் புறப்பட்டு ஜோர்டான் எல்லையை அடைந்துள்ளனர்.
இவ்வாறு இந்திய துாதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்
-
இன்று இனிதாக ... (23.06.2025) சென்னை
-
ஆயிரம் சந்தேகங்கள்: பணி ஓய்வுக்குப்பின் பணத்தை எதில் முதலீடு செய்யலாம்?
-
கடந்த 11 ஆண்டுகளில் காபி ஏற்றுமதி 125 சதவிகிதம் அதிகரிப்பு
-
வர்த்தக துளிகள்
-
கிரிப்டோ வருவாயை மறைத்தால் வருமான வரித்துறை நோட்டீஸ்
-
இந்த வாரம் வரிசை கட்டும் 11 ஐ.பி.ஓ., முதலீட்டாளர்களுக்கு சாதகமா, பாதகமா?