ராங்கியத்தில் 80 சவரன் கொள்ளை

புதுக்கோட்டை: வெளியூர் சென்றவர் வீட்டின் பூட்டை உடைத்து, 80 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி, 2 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியத்தை சேர்ந்தவர் அழகர்சாமி, 60; எல்.ஐ.சி., ஏஜென்ட்.

இவரது மனைவி வசந்தி, 55. இருவரும், நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்தனர்.

இந்நிலையில், நேற்று இவரது வீட்டில் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 80 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி, 2 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

அழகர்சாமி புகாரில், பனையப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement