'போதை' தொழிலாளிக்கு வெட்டு ரியல் எஸ்டேட் பிரமுகருக்கு 'காப்பு'
சேலம்: சேலம், அன்னதானப்பட்டி, அபிராமி கார்டனை சேர்ந்தவர் சத்-யநாதன், 43. கேட்டரிங் தொழிலாளி. இவரது மகள், தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார். இவருடன் படிக்கும் சக மாணவி, சூரமங்கலம், முல்லை நகரில் வசிக்கிறார். அந்த மாணவி மூலம், அவரது தாய் மாலதி, 40, என்பவருடன், சத்ய-நாதனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, சத்யநாதன், 'போதை'யில் வீடுதேடி சென்று, மாலதியுடன் தகராறு செய்துள்ளார். அதை, மாலதியின் கணவரான ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ், 46, தட்டிக்கேட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆத்தி-ரத்தில் சுரேஷ், கத்தியால் வெட்டியதில், சத்யநாதன் படுகாயம் அடைந்து, தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக சூர-மங்கலம் போலீசார் விசாரித்து, கொலை முயற்சி பிரிவில் நேற்று சுரேைஷ கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement