சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்; 20 பேர் பலி; 52 பேர் படுகாயம்!

டமாஸ்கஸ்: சிரியாவில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 52 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மேற்கு ஆசிய நாடான சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் மார் எலியாஸ் என்ற தேவாலயம் உள்ளது. இங்கு ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேவாலயத்தில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவாலயத்தில் மக்களோடு மக்களாக இருந்த ஒருவன் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 52 படுகாயம் அடைந்துள்ளனர் என சிரியா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




மேலும்
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
-
கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே