சேப்பாக்கம் தொகுதிக்கு உதயநிதி 'விசிட்'; குடிசை பகுதிகள் துணியால் மறைப்பு; கருத்து சொல்லுங்க மக்களே!

30

சென்னை: சேப்பாக்கம் தொகுதியில் உள்ள குடிசை பகுதிகள், துணை முதல்வர் உதயநிதி வருகையையொட்டி, துணியால் (திரைச்சீலை) மறைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உங்களது கருத்தை கமெண்ட் செய்யுங்கள் வாசகர்களே!


சேப்பாக்கம் தொகுதிக்கு துணை முதல்வர் உதயநிதி செல்ல இருந்தார். அவர் தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுவை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. உதயநிதி வருகையையொட்டி, பக்கிங்காம் கால்வாய் மற்றும் ஏழைகளின் குடிசைகளை மறைக்க இருபுறமும் திரைச்சீலைகள் கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



ஒருபுறம் பக்கிங்காம் கால்வாய், மறுபுறம் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகள் துணியால் மறைக்கப்பட்ட சம்பவம் பேசும் பொருளானது. இது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கமென்ட் செய்து வருகின்றனர்.


இது குறித்து, வீடியோ மற்றும் படங்களை பார்த்துவிட்டு உங்களது கருத்தை கமெண்ட் செய்யுங்கள் வாசகர்களே!


அன்று நடந்த கூத்து!




கடந்த மே 31ம் தேதி மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்ற போது, அவர் செல்லும் வழியில் இருந்த பந்தல்குடி கழிவு நீர் கால்வாய் அலங்காரத் துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம் விமர்சனத்தை கிளப்பியது. பின்னர் அலங்காரத் துணி அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement