ஈரானுக்கு உதவ தயார்: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

மாஸ்கோ: ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறினார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷ்யா சென்றுள்ளார். அவர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார். இருவரும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து பேசினர்.
அப்போது புடின் கூறியதாவது:
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் நெருக்கடிக்கு மத்தியில் ஈரானிய மக்களுக்கு ஆதரவாக ரஷ்யா தீவிரமாக இருந்து வருகிறது.ஈரானுடன் பல ஆண்டுகளாக நெருங்கிய உறவுகள் ஆழமாக இருக்கிறது. அதே நேரத்தில் இஸ்ரேலுடன் கலாச்சார உறவுகள் மற்றும் மக்கள் தொடர்புகள் உள்ளது. இஸ்ரேலில் 20 லட்சம் ரஷ்ய மொழி பேசும் வாழ்கிறார்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுடன் ரஷ்யா வரலாற்று நட்பு உறவுகளை கொண்டிருக்கிறது. இங்குள்ள மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் முஸ்லிம்கள் இங்குள்ளனர்.
ஆகவே, இஸ்ரேல், அமெரிக்காவுடன் மோதல் நடைபெறும் நிலையில் ஈரானுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் இரு நாடுகளுக்கு இடையே சமரசம் செய்து வைக்கவும் தயாராக இருக்கிறோம்.
அதே நேரத்தில் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு புடின் கூறினார்.




மேலும்
-
10 ஆண்டு கடந்த தெருவிளக்கு கம்பங்கள் மறைக்க 'மேக் அப்' செய்யும் மாநகராட்சி
-
ரூ.5.53 கோடியில் பணிகள் பள்ளிக்கரணையில் துவக்கம்
-
நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்; அத்திக்கடவு திட்டம் இதுவல்ல என்கிறார் எம்.பி.,
-
சிறுமியரிடம் சில்மிஷம் காவலாளிக்கு தர்ம அடி
-
* உதயநிதி வருவதால் கால்வாய், குடிசைகள் மறைப்பு... மூடி மறைப்பதா?
-
அசல் சான்றிதழ் எப்போது?