ரூ.5.53 கோடியில் பணிகள் பள்ளிக்கரணையில் துவக்கம்

பள்ளிக்கரணை, பெருங்குடி மண்டலம், வார்டு 189க்கு உட்பட்ட பள்ளிக்கரணை பகுதியில், 5.53 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப்பணிகளை, சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் நேற்று துவக்கி வைத்தார்.
அதில், 5.24 கோடி ரூபாயில், 55 உட்புற சாலைகள் சீரமைக்கும் பணிகளும், 29 லட்சம் ரூபாயில், 1,135 ச.அடி பரப்பளவில், சுகாதார மைய கட்டடம் அமைக்கும் பணியும் அடங்கும் என, அதிகாரிகள் கூறினர்.
நாரயணபுரத்தில், காலை 11:45 மணிக்கு சாலை பணிக்கும், காமகோட்டி நகர் 6வது தெருவில், காலை 11:55 மணிக்கு சுகாதார மையம் கட்டுமானப் பணிக்கும் பூமி பூஜை போடப்பட்டது.
இந்நிகழ்வில், மாநகராட்சி உதவி கமிஷனர் முரளி - பொறுப்பு, உட்பட்ட அதிகாரிகள், பொது மக்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்டாலின் அமைச்சரவையில் வேலுவும், முருகனும் அமைச்சர்கள்
-
யு.பி.எஸ்., திட்டத்துக்கு காலக்கெடு நீட்டிப்பு
-
டெங்கு, சிக்குன்குனியா தயாராகும் தடுப்பூசிகள்
-
பெயரை மாற்றச்சொன்ன சென்சார் போர்டு: அமைச்சர் சுரேஷ் கோபி படத்துக்கு சிக்கல்
-
நீதிபதி தகுதிநீக்க தீர்மான நோட்டீசில் எம்.பி.,க்கள் கையெழுத்தில் முரண்பாடு
-
பயிர் கடனுக்கு ஜாமின்தாரர் உத்தரவாதம்; வேளாண் கூட்டுறவு வங்கிகள் நெருக்கடி
Advertisement
Advertisement