ரூ.5.53 கோடியில் பணிகள் பள்ளிக்கரணையில் துவக்கம்

பள்ளிக்கரணை, பெருங்குடி மண்டலம், வார்டு 189க்கு உட்பட்ட பள்ளிக்கரணை பகுதியில், 5.53 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப்பணிகளை, சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் நேற்று துவக்கி வைத்தார்.

அதில், 5.24 கோடி ரூபாயில், 55 உட்புற சாலைகள் சீரமைக்கும் பணிகளும், 29 லட்சம் ரூபாயில், 1,135 ச.அடி பரப்பளவில், சுகாதார மைய கட்டடம் அமைக்கும் பணியும் அடங்கும் என, அதிகாரிகள் கூறினர்.

நாரயணபுரத்தில், காலை 11:45 மணிக்கு சாலை பணிக்கும், காமகோட்டி நகர் 6வது தெருவில், காலை 11:55 மணிக்கு சுகாதார மையம் கட்டுமானப் பணிக்கும் பூமி பூஜை போடப்பட்டது.

இந்நிகழ்வில், மாநகராட்சி உதவி கமிஷனர் முரளி - பொறுப்பு, உட்பட்ட அதிகாரிகள், பொது மக்கள் பங்கேற்றனர்.

Advertisement