ஆர்.எஸ். பாரதி எப்போதுமே பொய் பேசுபவர்; எஸ்.பி. வேலுமணி காட்டம்

கோவை: தி.மு.க.,வின் ஆர்.எஸ். பாரதி எப்போதுமே பொய் பேசுபவர்; மக்கள் முழுமையாக தி.மு.க. எதிர்ப்பாக மாறிவிட்டனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி காட்டமாக கூறி உள்ளார்.
@1brகோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் 24வது பேரூர் ஆதினம் சாந்தலிங் ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில், ஆதின மடத்தின் பாரம்பரிய சிவ வேள்வி பூஜை நடைபெற்றது.
இந் நிகழ்வில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.
இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகின. அவரின் இந்த பங்கேற்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந் நிலையில் இதுகுறித்து எஸ்.பி. வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம்;
இது நடந்தது மடத்தில் அவரது இடத்தில் நடந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சி. அதற்குதான் அழைப்பு. அதற்கு தான் போனோம். எப்போதுமே நான் போகக்கூடிய நிகழ்ச்சி. நான் மட்டுமல்ல, கோவை மாவட்டத்தில் உள்ள முக்கியமானவர்கள் எல்லாரும் வந்திருந்தனர். அதுக்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.
அடிகளார் நிகழ்ச்சிக்கு அவர் (மோகன் பாகவத்) சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அது என்னுடைய தொகுதி. நான் மட்டுமல்ல, எல்லோருமே அங்கே போயிருந்தனர். இதுக்கும், ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கும் மட்டுமல்ல, இப்போது அல்ல... அவர்கள்(ஆர்எஸ்எஸ்) எப்போதுமே எங்களை கூப்பிட மாட்டார்கள். அது (ஆர்எஸ்எஸ்) தனி அமைப்பு.
அதேபோல, தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அந்த நிகழ்ச்சி நடந்தது வேற. தி.மு.க., வந்து அவர்களின் இயலாமையை வந்து குறிப்பாக, மக்கள் முழுமையாக அவர்கள் (தி.மு.க.) எதிர்ப்பாக மாறிவிட்டனர்.
இதை மறைக்க, ஒரு மிகப்பெரிய மகானின் நிகழ்ச்சிக்கு நாங்கள் போனதை திரித்து, கிளப்பி விடுகின்றனர். இது மனசாட்சி இல்லாமல் செய்கிற வேலை. அது புனித மடம். நாங்கள் எப்போதுமே போவோம். அதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் முக்கியமானவர்கள். எத்தனை விஐபிக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ்-சா?
ஆர்.எஸ். பாரதி முருகன் மாநாடு மற்றும் இந்த நிகழ்ச்சி பற்றி பேசி இருக்கிறார். ஆர்.எஸ். பாரதி எப்போதுமே பொய் பேசுபவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கால்பந்து: இந்தியா கோல் மழை
-
குத்துச்சண்டை: இந்தியா அபாரம்
-
மின்சார இன்ஜின் டெண்டர்: காங்., குற்றச்சாட்டிற்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு
-
கத்தாரில் அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
-
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட டிரம்ப் நினைப்பதற்கு காரணம் என்ன? அமெரிக்கா புது விளக்கம்
-
உலகத்தை வழி நடத்துவதே இந்துத்துவாவின் நோக்கம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்
Advertisement
Advertisement