கால்பந்து: இந்தியா கோல் மழை

புதுடில்லி: பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், 2026, மார்ச் 1-26ல் ஆஸ்திரேலியாவில் (12 அணிகள்) நடக்கவுள்ளது. நடப்பு சாம்பியன் சீனா, 2, 3வது இடம் பிடித்த தென் கொரியா, ஜப்பான், தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா என 4 அணிகள் நேரடியாக பங்கேற்க உள்ளன.
மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடக்கிறது. 34 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
இந்திய அணி 'பி' பிரிவில் தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர்-லெஸ்தே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் இந்திய அணி, மங்கோலியாவை சந்தித்தது. இதில் கோல் மழை பொழிந்த இந்திய அணி 13-0 என வெற்றி பெற்றது.
இந்தியா அணியின் பியாரி ஜாஜா (29, 45, 46, 52, 55) ஐந்து கோல் அடித்து அசத்தினார். சவுமியா (20, 59), பிரியதர்ஷினி (73, 86) தலா 2 கோல் அடித்தனர்.
தவிர, சங்கிதா (8), ரிம்பா (67), மாளவிகா (71), கிரேஸ் (75) தலா ஒரு கோல் அடித்தனர்.
சிறந்த வெற்றி
ஆசிய கால்பந்தில் இந்திய பெண்கள் அணியின் சிறந்த வெற்றியாக (13-0, எதிரணி-மங்கோலியா) இது அமைந்தது. முன்னதாக 1997, 2005ல் குவாம் அணிக்கு எதிராக 10-0 என வென்றதே முதலிடத்தில் இருந்தது.
மேலும்
-
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20% சரிவு கண்டுகொள்ளாத தமிழக அரசு
-
35,000 போலீசாருக்கு பாதிப்பு; தி.மு.க., அரசுக்கு பழனிசாமி கண்டனம்
-
சிறுவாலையில் உச்சிகாலை பூஜை
-
வெங்கந்துாரில் மக்கள் தொடர்பு முகாம்
-
தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.71 லட்சத்தில் புதிய வாகனம்
-
மாம்பழ விவசாயிகள் தவிக்கும் சூழலில் அமைச்சரும், இயக்குநரும் அமெரிக்கா பயணம்