குத்துச்சண்டை: இந்தியா அபாரம்

மாஹே: செசல்ஸ் தேசிய தின குத்துச்சண்டை தொடர், மஹேயில் நடந்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய ஹிமான்ஷு சர்மா (50 கிலோ), ஆஷிஷ் (55 கிலோ), கவுரவ் சவுகான் (90+ கிலோ) என மூன்று வீரர்கள் தங்கப்பதக்கம் கைப்பற்றினர்.
தவிர அன்மோல் (60 கிலோ), ஆதித்யா யாதவ் (65), நீரஜ் (75) என மூன்று வீரர்கள் பைனலில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் மட்டும் கிடைத்தன.
70 கிலோ பிரிவு அரையிறுதியில் தோற்ற இந்திய வீரர் கார்த்திக் தலால, வெண்கலம் கைப்பற்றினார்.
மொத்தம் இத்தொடரில் 7 பதக்கம் வசப்படுத்திய இந்தியா, பட்டியலில் முதலிடம் பிடித்தது. மொரிசியஸ் அணி 6 பதக்கத்துடன் இரண்டாவது இடம் பெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement