விஜய் கட்சியினர் வைத்த பேனர் சரிந்து விழுந்ததில் முதியவர் காயம்
வில்லிவாக்கம், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பிறந்த நாள் விழாவை, மாநிலம் முழுதும் கட்சியினர் கொண்டாடினர். அந்தவகையில், வில்லிவாக்கம், தெற்கு மாடவீதியில், மத்திய சென்னை மாவட்ட கட்சி அலுவலகத்தின் திறப்பு விழா நடந்தது.
விழாவில், கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, வில்லிவாக்கத்தில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, தெற்கு மாடவிதியில், 10*12 என்ற அளவில் 10க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது, கட்சி அலுவலகம் அருகில் இருந்த பேனர் சரிந்து, அவ்வழியாக நடந்து சென்ற சூளையைச் சேர்ந்த காவலாளி மோகன், 73, என்பவர் மீது விழுந்தது.
இதில், தலை, தோள்பட்டையில் பலத்த காயமடைந்தவரை அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அனுமதியின்றி பேனர் வைத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில், வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மந்தம்: தனியாருக்கு விட்ட பின் உரமாக்கும் பணிகள் குறையுது
-
போலீஸ் செய்தி
-
லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
-
மாவட்டத்தில் புதிதாக 22 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கும் பணிகள் துவக்கம்
-
நரிக்குடி பட்டமங்கலத்தில் பூட்டி கிடக்கும் துவக்கப்பள்ளி: மீண்டும் திறக்க பெற்றோர் கோரிக்கை
-
சூறாவளிக்கு வீடுகள் சேதம்