போலீஸ் செய்தி

பீர் பாட்டிலால் குத்தியவர் கைது

சாத்துார்: சாத்துார் ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 60. சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டி ,55. இருவரும் கொத்தனார். இந்நிலையில் காண்ட்ராக்டர் ஆண்டியை வேலையை விட்டு நிறுத்தி உள்ளார். இதற்கு ஆறுமுகம் தான் காரணம் என நினைத்த ஆண்டி நேற்று முன்தினம் பகல் 12:00மணிக்கு ஒ.மேட்டுப்பட்டியில் ஆறுமுகம் தலையில் பீர் பாட்டிலால் ஆண்டி தாக்கியதோடு உடைந்த பாட்டிலால் வயிற்றில் குத்தியுள்ளார். சாத்துார் தாலுகா போலீசார் கொத்தனார் ஆண்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement