லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
காரியாபட்டி: தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு நிலக்கரி ஏற்றிய டாரஸ் லாரியை சேலம் அந்தியூரை சேர்ந்த டிரைவர் சக்திவேல் மது போதையில் அதி வேகமாக ஓட்டினார்.
நேற்று அதிகாலை 1:00 மணிக்கு காரியாபட்டி கல்குறிச்சி அருகே வந்த போது நிலை தடுமாறி லாரி கவிழ்ந்தது. டிரைவர் சக்திவேல் சம்பவ இடத்திலே பலியானார். தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். ரோட்டில் நிலக்கரி கொட்டியதால் தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement