பணியில் சேர முடியாத சுகாதார அலுவலர்
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் சுகாதார அலுவலராகப் பணியாற்றிய பிச்சை, கடந்தாண்டு மதுரைக்கு மாறுதல் செய்யப்பட்டார். பிச்சைக்கு பதிலாக மதுரையில் பணியாற்றிய ராஜ் கண்ணன் என்பவர் திருப்பூருக்கு மாற்றப்பட்டு பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இம்மாதம், நகராட்சி நிர்வாக இயக்குனர், மதுரையில் பணியாற்றிய அலுவலர் பிச்சையை திருப்பூருக்கும், இங்கிருந்து ராஜ் கண்ணனை மதுரைக்கும் இடமாறுதல் செய்து உத்தரவிட்டார்.
அதன்படி, பிச்சை மதுரை மாநகராட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டார். திருப்பூர் வந்த அவர் இதுவரை பணியில் சேரவில்லை. ராஜ்கண்ணன் விடுவிக்கப்படாத காரணத்தால், அவர் (பிச்சை) மதுரையிலிருந்து விடுவிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் அவர் இதுவரை பணியில் இணையாமல் உள்ளார்.
மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி கூறுகையில், ''இடமாறுதல் உத்தரவு பெற்று வந்த அலுவலர் பிச்சை ஒருமுறை என்னை வந்து சந்தித்தார். பின், நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் சில பணிகள் உள்ளதாகக் கூறிச் சென்றார். மீண்டும் அவர் இது வரை வரவில்லை. வேறு எந்த தகவலும் அவர் குறித்து இது வரை இல்லை,'' என்றார்.
மேலும்
-
நீதிபதி தகுதிநீக்க தீர்மான நோட்டீசில் எம்.பி.,க்கள் கையெழுத்தில் முரண்பாடு
-
பயிர் கடனுக்கு ஜாமின்தாரர் உத்தரவாதம்; வேளாண் கூட்டுறவு வங்கிகள் நெருக்கடி
-
5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது!: கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டை வீழ்த்தியது காங்.,
-
விவசாயி மர்ம மரணம் : போலீசார் விசாரணை
-
அதிர்வலைகளை ஏற்படுத்திய பவன் கல்யாண்; காங்கிரஸ், இந்திய கம்யூ., கண்டனம்
-
தோல்வி பயத்தில் உளறும் தி.மு.க., நாகேந்திரன் கடும் தாக்கு