புகார் பெட்டி : குப்பையை சாலையில் கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தில் இருந்து, தந்தை பெரியார் தெருவிற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் இரு இடங்களில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்புவாசிகள் குப்பை தொட்டிகளில் கொட்டாமல், குப்பை தொட்டி அருகே வீசி விட்டு செல்கின்றனர்.

இதனால், அந்த சாலை வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள் மற்றும் பல தரப்பட்டவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி துறையினர் குப்பையை அகற்றி, தொற்று நோய் பரவுவதை தடுக்க வழி வகுக்க வேண்டும்.

- பி. வெங்கடேசன்,

காஞ்சிபுரம்.

Advertisement