சேலத்தில் நடந்த விபத்தில் சட்டக்கல்லுாரி மாணவர் பலி

சேலம், சேலத்தில் நடந்த விபத்தில், சட்டக்கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்.
சேலம், இடைப்பாடி அருகில் கோரணம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் சரண், 21. இவர் சேலத்தில் உள்ள சட்டக்கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் வீட்டிலிருந்து பைக்கில் கல்லுாரிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை, 8:15 மணிக்கு கந்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம், அவரது பைக் மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த சரண், தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சூரமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement