மொபைல் திருடியவர் கைது



சேலம், சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 28. நேற்று முன்தினம் ஜாகீர் அம்மா பாளையத்தில் இருந்து, டவுன் பஸ்சில் பார்சல் சர்வீஸ் அலுவலகத்திற்கு செல்ல வந்துள்ளார். பள்ளப்பட்டியில் இறங்கியுள்ளார். அப்போது மர்ம நபர், விக்னேஷ் சட்டை பையில் இருந்து மொபைல்போன் பறித்து கொண்டு தள்ளி விட்டுள்ளார்.

இதில் கீழே விழுந்த விக்னேஷ் கூச்சலிட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் மர்ம நபரை கையும் களவுமாக பிடித்து, தர்ம அடி கொடுத்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார், 28, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement