அனைத்து புகழுக்கும் தகுதியானவர் டிரம்ப்; பாராட்டி தள்ளும் அமெரிக்கா

வாஷிங்டன்; ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் நிறுத்தம் அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, அந்நாடுகள் இடையே போர் மூண்டது. போரில் இரு நாடுகளும் தீவிரமாக இறங்க, உலக நாடுகள் மத்தியில் பதற்றமான சூழல் காணப்பட்டது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களம் இறங்க ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இதை கண்டித்தன. போர் உக்கிரமான கட்டத்தை நோக்கி நகர்ந்த நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
அடுத்த 12 மணி நேரத்தில் போர் முடிந்ததாக கருதப்படும் என்றும் அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரான், இஸ்ரேல் நாடுகள் உறுதிப்படுத்தவில்லை.
இந் நிலையில், டிரம்புக்கு அந்நாட்டு பிரதிநிதிகள் சபை பாராட்டுகளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சபாநாயகர் மைக் ஜான்சன் கூறி இருப்பதாவது;
இது(போர் நிறுத்த அறிவிப்பு) உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. அனைத்து புகழுக்கும் தகுதியானவர் டிரம்ப். வலிமை மூலம் அமைதி எப்படி இருக்கும் என்பது இதுதான். உண்மையில் ஒரு பெரிய நிம்மதியான மூச்சு.
இவ்வாறு அவர் பாராட்டி உள்ளார்.

மேலும்
-
போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் 4 பேர் பலி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கம்
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்